துவக்கு கவிதைப் போட்டி

புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை இலக்கியமாக பதியப்பட வேண்டும் என்னும் நோக்கில் துவக்கு இலக்கிய அமைப்பு, மாற்று கவிதை இதழ் மற்றும் கூடல்.காம் தமிழ் இணையதளம் ஆகியவற்றுடன் உலகளாவிய கவிதைப் போட்டியினை நடத்துகிறது. இக்கவிதைப் போட்டி குறித்தான அறிவுப்புகள் வார்ப்பு.காம், கீற்று.காம், திசைகள்.காம், அம்பலம்.காம், திண்ணை. காம், பதிவுகள்.காம் போன்ற இணையதளங்களிலும், கணையாழி, இந்தியா டுடே,புதிய காற்று, இனிய நந்தவனம், நடவு, கவிதை உறவு, ஒடுக்கப்பட்டோர் குரல் மற்றும் 60க்கும் மேற்பட்ட சிற்றதழ்களிலும் வந்திருக்கிறது. போட்டிக்கான கவிதைகள் தமிழக முகவரிக்கும் துபாய் முகவரிக்கும் வந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் மூலமாக வரும் கவிதைகள், பதிவுத் தபால்களில் வரும் கவிதைகள் என யாவும் முறையாகவும் தொகுக்கப்பட்டு வருகிறது..

வலைப்பூ நண்பர்கள் அறியும் பொருட்டு போட்டி குறித்தான அறிவிப்பை இங்கே பதிகிறேன்.

துவக்கு கவிதைப் போட்டி - புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவு

துவக்கு இலக்கிய அமைப்பு, மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி.

முதல் பரிசு: உருபா. 10,000
இரண்டாம் பரிசு: உருபா. 7500
மூன்றாம் பரிசு: உருபா. 5000
பாராட்டு பரிசு: உருபா. 1000 பத்து கவிதைகளுக்கு

கவிதைகள் அனுப்பவேண்டிய முகவரிகள்.
இ. இசாக்
P.O.Box : 88256
Dubai, U.A.E.

சி. சுந்தரபாண்டியன்
மாற்று கவிதையிதழ்
கோணான்குப்பம் - 606 104
விருதாசலம் வட்டம்
தமிழ்நாடு.

மின்னஞ்சலில் அனுப்ப thuvakku@yahoo.com, thuvakku@gmail.com

கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15.திசம்பர்.2005

விதிமுறைகள்:
1. கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும், தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும்.
2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும்.
3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும்.
4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது.
6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.

மேலும் விரிவான விபரங்கள் அறிய:
மாற்று கவிதையிதழ் http://www.thuvakku.com/, http://www.koodal.com/, பார்க்கவும்.

தொடர்புகளுக்கு:

இ. இசாக்- 00971 503418943.
கவிமதி- 00971 505823764
நண்பன்- 00971 50 8497285.
சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653,
முத்துகுமரன்-00971506243115,

சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254.

அன்புடன்

முத்துகுமரன்

2 மறுமொழிகள்:

b said...

நல்ல செய்தி முத்துக்குமரன்.

நன்றி.

முத்துகுமரன் said...

நன்றி மூர்த்தி. போட்டி குறித்தான அறிவிப்பபை உங்கள் வலைதளத்திலும் இட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது....உங்கள் நண்பர்களுக்கும் போட்டி குறித்து தெரியப்படுத்துங்கள்..

மிக்க்க நன்றி....

Related Posts with Thumbnails