எ.பி.ந(எனக்கு பிடித்த் நகைச்சுவையாளர்) - 2005 -2006

எ.பி.ந. ( எனக்கு பிடித்த நகைச்சுவையாளர்) -2005-2006

திரு.சுஜாதா(எழுத்தாளர்)

சமீபத்தில் தனது நகைச்சுவை பேச்சால் மயங்கடித்தூகொண்டிருப்பவர்.

அவற்றில் இவ்விருதிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நகைச்சுவை முத்துகள்

1. கருத்து.காம் - 2005ஆம் ஆண்டின் சிறந்த இணையதளம்

2.நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.


விருதுப் பரிந்துரை ----- நானே
தேர்வுக் குழு ---- நானே
விருது அறிவிப்பு ---- அட நானேதாம்பா

பி.கு : இந்த தேர்வுக்கும் வலைப்பூ தேர்தலுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது:-) )

சோதனை பதிவு

திசைகள் இதழில் எனது கவிதை

வாழ்க்கையெனும் ஓடம் http://www.thisaigal.com/jan06/PoemMuthukumaran.htm

உங்கள் மனைவிக்கு நீங்கள் எத்தனையாவது கணவன்

நமக்கும் கல்யாண வயசு வந்திடுச்சில.....

எல்லோரையும் போல நமக்கும் கல்யாண கனவுகள் வர ஆரம்பிசிடுச்சுபா....

கனவு மட்டும் கண்டா போதுமா?

நனவாக்க வேண்டாமா?

என்ன செய்யறது.கனவு நிறைவேற மொதல்ல பொண்ணு தேவை,

அதிலயும் நமக்கேத்த பொண்ணு வேணும். நல்ல பாசமான பொண்ணா, ஒழுக்கமான பொண்ணா, தைரியமான பொண்ணா வேணும். சரி அத வீட்ல பார்த்துகுவாங்க. முகவரி வேண்டுபவர் தனிமடலில் தொடர்பு கொள்க:-)

இங்க ஒன்னு சொல்லிக்கணும்.

ஒழுக்கமான பொண்ணு வேணும்ன்னு சொல்ற தகுதி எனக்கு முழுசா இருக்குதுபா.!!

அப்புறம் சின்ன வயசில இருந்தே நாம ரசிக்கிறது கல்யாணங்களை.
அங்க நடக்கிற சுவரஸ்யமான விசயங்கள் மீது எப்போதும் ஒருவித கிறக்கமே உண்டு.பருவம் வந்த நாளில் இருந்து கலந்து கொண்ட திருமணங்களின் போது என்னை கதாநாயகனாக்கி மனசுக்குள் தனி ட்ராக் ஒன்று ஓடும். பயப்பிடாதீங்க பொன்ணு வேறதானுங்க.....

அந்த சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாம் மிக மிக பிடித்தமானது. மோதிரம் எடுப்பது,எடுக்கும் சாக்கில் கையை கிள்ளுவது அல்லது பிடித்தவைத்து கொள்வது, தேங்காய் உருட்டி விடுவது, தலையில் அப்பளம் அடிப்பது, தொட்டில் கட்டி தாலாட்டு பாடுவது என நினைக்கும் போதே உற்சாகத்தை ஊட்டி விடுகிறது.சரி

அப்டியே இன்னும் கொஞ்சம் டீப்பா நம்ம கல்யாண சங்கதிகளை தெரிஞ்சிக்க பயணிச்சபோது(இப்டி எல்லாம் எழுதாட்டி நான் எப்டி இலக்கியவாதின்னு சொல்லிக்கிறது),

விழுந்தது பாரு ஒரு அணுகுண்டு.....

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்றால் முதலில் ஸோமன் உன்னை அடைந்தான், இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான், மோன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மனுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன்

''அட,

எவ்ள தைர்யம் இருந்தா என் வீட்டுக்காரிக்கு முதல் அவன் அடுத்து இவன் அதுக்கடுத்து இவன் அப்பாலதான் நீன்னு என்கிட்டயே சொல்லுவான்.

ஆறாம் அறிவு கேள்வி கேட்குதுபா? என்னத்த சொல்றததுக்கு....


எத்தகைய ஒரு இழிவான செயலை, பெண்களுக்கு எதிரான வன்முறையை, சடங்கு என்ற பெயரில் அரங்கேற்றி இருப்பார்கள்(க்கிறார்கள்). அதையும் ஆட்டுமந்தை கூட்டம் போல கேட்டு வந்திருக்கிறார்களே மறத்தமிழர்கள்???

பெண்ணை, முழுமையாக கேவலப்படுத்தும் இந்த மாதிரியான மந்திரங்களின் மீதுதான் குடும்ப வாழ்வை கட்டி எழுப்ப வேண்டுமா? மக்களின் இறை நம்பிக்கையை அவர்களை இழிவு செய்வதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தியஇந்த நம்பிக்கை துரோகம் எத்தனை குரூரமானது. ரத்தம் வர வைப்பது மட்டும் வன்முறை அல்ல. இது போன்ற மரபுகளின் வேர்களையே அழிக்கும் தீவிரவாதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

அதன் ஒரு முயற்சியாக

என் திருமணத்தை செய்யப்போகிறேன் ( சில ஆண்டுகள் கழித்து)

இது போன்ற மந்திர மோசடிகள் இன்றி,

தன்னை இழிவு படுத்தும் சடங்குகளை ஏற்க மறுக்கும் தெளிவை பெற்ற ஒரு பெண்ணை என் இணையாக ஏற்று,

பி.கு: மந்திரத்திற்கு விளக்கமளித்து என்னை தெளிவடையச் செய்த பெரியாவாளுக்கு அடியேனின் பாதகோடி நம்ஸ்காரங்கள்.

நன்றி:( சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்: இரண்டாம் பகுதி, பக்கம் 875)..

இந்த களேபரத்தில ஒன்னை மறந்துட்டேன் -

அதாம்பா

புத்தாண்டு வாழ்த்துகள்
Related Posts with Thumbnails