அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து......



உன் முகம்
காண காத்திருந்த தருணம்
என் இரண்டாம் கருவறைக் காலம்.

ஒட்டாத எதிர் வாழ்முறையில்
நாமிருந்தாலும்
கறை களைந்து,
கனம் மறந்து
தாய்மையோடு
ஒவ்வொரு நொடியும்
சுமக்கிறாய் என்னை
மழலையாய்.

என் சொந்தப் பெயர்போலவே
இனிக்கிறது
என்னை நீ அழைக்கும்
உன் தெய்வத்தின் பெயரும்.

வானமாய் விரிந்திருக்கும்
உன் அன்பை
சொற்களில் சிறைபிடித்திடாமல்
சொல்கிறேன்.

அம்மா உனக்கு
பிராத்தனைகளோடு
என் பிறந்தநாள் வாழ்த்து

0 மறுமொழிகள்:

Related Posts with Thumbnails