கர்நாடக அல்வா



ஆசையே துன்பத்திற்கு காரணம்.

கல்விக்கு உதவுங்கள் - மென்பொருள் துறை நண்பர்களே

இணையத்து தமிழ் நண்பர்களே! வணக்கம். MCA Final Yearபடிக்கும் தந்தையை விபத்தில் இழந்த ஒரு கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டி இந்தப் பதிவிடுகிறேன்.

குவைத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி திரு.அழகேந்திரன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் குவைத்தில் ஒரு கோரமான சாலைவிபத்தில் அழகேந்திரன் பயணித்த ஜீப்பின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விழுந்து நசுங்கியதில் இதர இரு பயணிகளோடு தானும் அகால மரணமுற்றார்.

அழகேந்திரன் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தாலும் கல்வியே அடுத்த தலைமுறையை மேம்படுத்தும் என அறிவுறுத்தியததை ஏற்று தனது மகளை தம் சமூக வழக்கத்தை மீறி உயர் கல்வியான MCA படிப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார்.

ஏப்ரல் மாதம் MCA தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தந்தை இறந்த நிலையிலும் படிப்பைத் தொடருகிறார். திருவில்லிபுத்தூரில் MCA படிக்கிறார். படிப்பில் 76% மதிப்பெண் இதுவரை பெற்றிருக்கிறார். இவரது MCA படிப்பைத் தொடர என்னால் இயன்ற நிதி உதவியைச் செய்திருக்கிறேன்.

இப்போது இவர் இறுதியாண்டு MCA படிக்கிறார். இறுதியாண்டில் MCA படிப்பின் அங்கமாக Project Work டிசம்பர் 2007 முதல் ஜூன் 2008 வரை கட்டாயமாக முடிக்க வேண்டும். சென்னையில் இருக்கும் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் FREE project work ஆக J2EE அல்லது .Net platformல் தனது Project workஐச் செய்து முடிக்க விரும்புகிறார்.

05அக்டோபர் 2007 க்குள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து MCA Course final semester - Acedamic Project work செய்ய அனுமதிக்கும் கடிதத்தை இவர் MCA படிக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.

தமிழ் இணையம் முழுதும் கணிணித்துறையில், பல்வேறு கணிணி, மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளகிய நெஞ்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

தந்தையை இழந்து தவிக்கும் நிலையிலும் தன் தந்தையின் கனவான MCA படிப்பைப் பூர்த்தி செய்ய விழையும் இந்த கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன்.

மேல் விபரங்கள், Resume , MCA கல்வித் தகவல்களுக்கு harimakesh@gmail.com எனும் எனது முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.

அன்புடன்,

ஹரிஹரன்
http://harimakesh.blogspot.com/2007/09/175-mca-project-work.html
****************************************************************
தேன்கூடு திரட்டியை பார்த்தபோது கண்ணில் பட்ட பதிவு இது. கல்வித்தேவைக்காக என்பதால் என் பதிவில் மீள்பிரசுரமாக இடுகிறேன்.மென்பொருள் துறையில் இருக்கும் நம் வலை நண்பர்கள் இந்த பெண்ணின் கல்விக்காக உதவி செய்யுங்கள்.

அன்புடன்
முத்துகுமரன்

''ரகுநாத்திற்கு'' பாராட்டுக்கள்

இன்று கூகுள் சாட்டில் உரையாடிக்கொண்டிருந்த போது திரு.கோவி கண்ணன் ஒரு அருமையான இணைப்பை வாசிக்க தந்தார். அது நம் தமிழ்மணம் திரட்டும் கேளீர் வழியாக கிடைத்திருக்கிறது.

Is Samskrutha harmful to Kannada??? என்னும் தலைப்பில் மொழி குறித்தான ஒரு ஆழமான உரையாடலை வாசிக்க கிடைத்தது. சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்த ஒரு கன்னடியருக்கு( HIFi) சக கன்னடியரான திரு ரகுநாத் கொடுத்த விளங்கங்களை வாசிக்க இங்கே செல்லுங்கள்.

சமஸ்கிருதத்தை உயர்வினைச் சொல்லவும் அதே சமயம் கன்னட மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாகவும் காண்பித்துக் கொள்ளும் பிரதிநிதியின் அனைத்து போர்யுக்திகளையும் அவை முறியடிக்கப்படும் கருத்து செறிவுள்ள உரையாடலை இங்கு காணலாம்.

அவர்கள் உரையாடலில் சில...
HiFi:
Kannada's "Bittu bidu" becomes "vuttudu" in Tamil! This is how they have simplified their language! Now you can tell Tamil is greater than Kannada! Because "Bittu bidu" has four letters (two words) and "Vuttudu" has three letters (single word!) Is it? Now you can get the clue from this one simple example that "Tamil" might have been derived from "Kannada" only! According to some scientific analogy, you may conclude that a word like "Bittu bidu" can transfer into "vuttudu" (through constant speaking for generations and also simplification process).
So whatever outsiders yell about India's history, is bullshit, and they are always biased about "Caste System" and "Sanskrit", and they want to use it as a weapon to discriminate and thus dismantle Indians.

Raghunath:
vuttudu is a ntaive tamil word.kannada words unwent change from v->b in late 10th century.It would be wrong to say that they have simplified like this.
What ever insiders tell is also not truth.No i don't believe in aryan invasion theory,but the language family theory is a very much proved.Its proved fact that sanskrit and kannada belongs to a complete different language families.

HiFi
These are some of the "Samskrutha" words that are available in "Kannada":

Prakruthi
Sambandha
Prema
Sathkaara
Santhosha
Sukha
Samyama
Kaanthi
Naveena

etc, etc.

Now do you feel "Kannada" can sustain the exit of all such words? Do you want "Kannada" to become another "Tamil"?

Raghunath:
Again assumptions....

When did i say that tamil actually deserves classical status?This is your assumption.When did you analyse tamil words to say that they are very unscientific and illogical? Again guessing... I have not accepted their complete removal of sanskrit words.They have a huge problem in their writting system,even they have a scope for improvemnet where askannada has a scope for simplification.

I think you understand what i meant in last sentence.

HiFi:
Any human being surviving on earth should have seen "Sun" right from their beginning. (Without "Solar Energy", any living species can't survive! Also even the early-man would have seen "Sun" daily! If Kannada & Kannadigas are even as old as "early man", then they should definitely have a word for "Sun") Right? Now tell me what is the "pure" Kannada word for "Sun"? (Soorya, Ravi, Adhithya... anything else?) Also, more importantly tell me the "pure" Tamil word for Sun, to clarify our doubts exactly! (probably they might have created a new pure Tamil word for it in the 16th century! Who knows!)

Raghunath:
ha ha ha....

Surya - nesara
chandra - tingaLu
vaayu - gALi
manushya- ALu(refer any linguist if you have doubt on this word)
shrungaara - samantha
uccharanne - uli
Akaasha - mugilu


HiFi:
And don't give that rubbish example of Tamil. They are one scrap set of people on earth! I don't think their intention behind chopping Samskrutha words was anything to do with "improving" their language. It was only some crap "caste" issue and also some administrative issue. In that way they wanted to feel superior over some sect of people. A proper linguist will prove that the chopping of Samskrutha words from Tamil and finding ragged alternatives for the same, was totally "illogical" & "unscientific".

Raghunath,

One thing that I want to convey you… With all these issues, I’m only trying to prove that “Kannada” has a history of at least 5,000 years (if not more), and also that “Kannada” had the potential to grow much stronger than what it is today! And also that “Kannada” did not born after “Sanskrit”, but still “Sanskrit” was older than Kannada and it influenced Kannada under unavoidable circumstances! How?

But before that I need to know your inputs about “religion”. I’m really interested at that… We will take up about “technicalities” later…

Raghunath:
HiFi,

As usual same sarcastic bullshit.Neenu tipparalaga hakkadru kannada 5000 varsha haLeyadhu antha torisokke agolla.

Instead of such bullshits,why don't you argue on some logical stand.

Firstly without knowing much about history of Classical music you write lengthy post about it which are plain bullshit.

when questioned you try to divert the question.

Secondly you write sanskrit's usage in technology aspects,which again are just plain imaginations by few sanskrit scholars(forget Outside world scholars) which is not even a approved analogy.

Again when asked about it,no replies.

HiFi,I will come to your favourite religion Issue itself.

Let me ask you one question,Please refer any history books and try to list the dominating religion-time map wrt kannadigas.

Let me know how much you have understood the growth path of Hinduism in karnataka and also relation of kannada with hinduism.

****************


Hifi பதில் சொல்ல திணறிய பொழுது உதிர்த்த ஒரு தன்னிலை விளக்கம் மட்டும் டிஸ்கியாக
//FYI, I'm not any Brahmana or other so-called high-caste person! Before you instigate any such thing, I want to make it clear (Because you are the only person here who aggressively talked about "caste" issues and felt proud of your caste and opened topics on that) So my this thread has nothing to do with "caste-related" issues. Coming from an inferior-caste (inferior to your so-called "caste"), I should actually have become a Cosmo OR Brahmin/Samskruth/Indian Culture hating person.

So my this argument is purely based on "technical" basis...//


பாராட்டுக்கள் திரு.ரகுநாத்.


பி.கு: ரகுநாத்தின் மொத்த உரையாடலில் சில இடங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்
நன்றி:
திரு.கோ.வி.கண்ணன்

சிவாஜி - விமர்சனம்



புகைப்படத்திற்கு நன்றி: www.sivaji-the-film.com

''சிவாஜி''க்கு தோல் கொடுத்த பெண்

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த படம். சிவாஜி ரசிகர்களுக்காக.
Secret behind Rajini's colour

If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru koodai Sunlight.Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics.

"We used cutting edge grafting technology and it was Shankar's brain child," revealed the film's cinematographer KV Anand. "For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar's earlier films," he said. One of the dancers, Jacky, was chosen by Shankar and Rajini's skin tone was matched with her's. The six and a half minute song was shot in Spain.

"Each shot of Rajni's in the song was once again shot with Jacky and was sent to Indian Arts. Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task," explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.










சிவாஜி பற்றிய என்னுடைய விமர்சனம் கொஞ்ச நாளைக்கு பிறகு வரும் :-)

நதிநீர் இணைப்பு எனும் ஏமாற்று வேலை

தேர்தல் அரசியலின், அரசியல்வாதிகளின் அடிப்படைத் தத்துவம் மக்கள் அல்லலுறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது அதை நீர்க்கச் செய்தலே! அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்டு வரும் பூதம் போல அவ்வப்போது வரும் ஒரு குரல் தேசிய நதிநீர் இணைப்பு. கேட்பதற்கு தேன் போன்று இனித்தாலும் ஆண் குழந்தை பெறுவது எப்படி சாத்தியமற்றதோ அதேபோலத்தான் இந்த நதிநீர் இணைப்பும். இந்தியா என்று ஒரு குடையின் கீழ் வாழ்ந்தாலும் முரண்களால் சூழப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுப்பு என்பது நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் அப்பட்டமாக தெரிகிறது.

இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போது ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நதிநீர் இணைப்பு முயற்ச்சி என்பது விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இந்தியாவின் தேசிய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டாலும் அது தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் மாநிலங்களுக்கு எந்த வித தீர்வையும் தந்துவிடாது.
கனவுகள் பலசமயம் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை ஒரு போதும் நடைமுறைக்கு வந்துவிடாது. கனவு கண்டு கொண்டே இருக்கும் கோவணத்தையும் உருவும் வித்தைதான் அரசியல்வாதிகள் நடத்துவது.

நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு. ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய நலன்கள் இந்த நதிநீர் இணைப்புக்கு மிகமுக்கிய இடையூறாக இருக்கிறது. இன்றைய சூழலில் வலுவான பிராந்தியங்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு மத்தியில் அரசியல் நடக்கக்கூடிய சூழல் இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான முரண்களை, வெறுப்புணர்வுகளை களைந்து அவர்களை சமநிலையில் அமர வைக்கும் யோக்கியதையோ, விருப்பமோ, பொறுப்புணர்வோ மத்தியில் ஆளும் எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது. அவரவரக்கு வரப்போகின்ற தேர்தல் சார்ந்த லாப நட்ட கணக்குகள்தான் இருக்கின்றதே தவிர மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.

நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,

**
விடைபெறும் முன்

அதிகரித்துவிட்ட பணிச்சூழலினால் பதிவுலகில் இயங்குவது மிகவும் குறைந்து போயிற்று. பதிவுகள் எழுதாவிடினும் தொடர்ச்சியான வாசிப்பாவது இருந்தது இப்போது அதுவும் குறைந்துவிட்டது. குறுவிடுப்பாக இந்தவார இறுதியில் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த அழுத்தங்களும் வேறு. அது பற்றிய விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்

என்றும் தமிழ்மணத்தோடு...



***

சாக்கடை புழுக்களளால்
மனதமைத்துக் கொண்டு-

தமிழ் மலர்களால்
மணம் வீசும்
பூங்காவின் வசந்தம் தாளாது
தேசபக்த ஓலமிடுகின்றன

குரூர அழுகல் சிந்தையோடு
திண்ணையில் வளர்க்கப்படும்
திருவாளர் நாய்கள்.


**

அம்மாவுக்கு பிறந்தநாள்



உன் முகம்
காண காத்திருந்த தருணம்
என் இரண்டாம் கருவறைக் காலம்.

ஒட்டாத எதிர் வாழ்முறையில்
நாமிருந்தாலும்
கறை களைந்து,
கனம் மறந்து
தாய்மையோடு
ஒவ்வொரு நொடியும்
சுமக்கிறாய் என்னை
மழலையாய்.

என் சொந்தப் பெயர்போலவே
இனிக்கிறது
என்னை நீ அழைக்கும்
உன் தெய்வத்தின் பெயரும்.

வானமாய் விரிந்திருக்கும்
உன் அன்பை
சொற்களில் சிறைபிடித்திடாமல்
சொல்கிறேன்.

அம்மா உனக்கு
பிராத்தனைகளோடு
என் பிறந்தநாள் வாழ்த்து

அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து......



உன் முகம்
காண காத்திருந்த தருணம்
என் இரண்டாம் கருவறைக் காலம்.

ஒட்டாத எதிர் வாழ்முறையில்
நாமிருந்தாலும்
கறை களைந்து,
கனம் மறந்து
தாய்மையோடு
ஒவ்வொரு நொடியும்
சுமக்கிறாய் என்னை
மழலையாய்.

என் சொந்தப் பெயர்போலவே
இனிக்கிறது
என்னை நீ அழைக்கும்
உன் தெய்வத்தின் பெயரும்.

வானமாய் விரிந்திருக்கும்
உன் அன்பை
சொற்களில் சிறைபிடித்திடாமல்
சொல்கிறேன்.

அம்மா உனக்கு
பிராத்தனைகளோடு
என் பிறந்தநாள் வாழ்த்து

தங்கமணியின் பெயரில் சில போலி பின்னூட்டங்கள்...

நன்றி தேசபக்தி சீமான்களே என்ற என்னுடைய பதிவில் தங்கமணி அவர்களின் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த போலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

தமிழ்மணமும், பூங்காவும் இந்திய தேசியத்திற்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் இயங்குவது போன்ற தோற்றத்தை தர பலநாட்களாக முயற்சிகள் நடந்துவருவது தெரிந்த ஒன்றுதான். சமூகத்தின் மாற்றுக் குரல்கள் ஒலிக்கும் போது சிலருக்கு நெருடலாகத்தான் இருக்கும். அவை விவாதிக்கப்பட வேண்டியது.

இந்த சூழலில் பூங்கா பற்றி விமர்சித்து திரு. ஜடாயு அவர்கள் பதிவிட்டிருந்தார்கள். விமர்சிப்பது அவர் உரிமை. அதிலும் இந்த பின்னுட்டம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பெயரிலி அவர்களின் பெயரிலும் ஒரு பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. தங்கமணி பெயரில் பிரசுரிக்கப்பட்ட அதே பின்னூட்டம் எனது பதிவிலும் இடப்பட்டு இருந்தது

//தங்கமணி has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே":

ஜடாயு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது.

உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?

பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.

நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.

நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by தங்கமணி to என் பார்வையில் at 11:06 AM, March 29, 2007
Anonymous has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே": //


இந்த பின்னூட்டத்தை என் பதிவில் அனுமதித்ததே தங்கமணி பெயரில் தவறாக பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதை தெரிவிக்கவே.

என் பதிவில் அரவிந்தன் நீலகண்டன் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் வேறு எங்கோ தெரிவித்த கருத்தை எடுத்துக் கொண்டு அதுக்கு பதிலாக மற்றொரு பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. இங்குதான் போலியாக இயங்கிய நபரின் புத்திக் கூர்மையும் வெளிப்படுகிறது. முகமும் வெளிப்படுகிறது.

அது கீழே

அரைவிந்தருக்கு தங்கமணி அவர்களின் எச்சரிக்கைக் கடிதம்:-

//காறி உமிழ்கிறேன்//

அரவிந்தன் நீலகண்டன்,

உங்களை மதித்து பதில் சொன்னேன். இன்னும் நீங்கள் திருந்துவதாக இல்லை. நான் தமிழ்மணத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றாவது தெரியுமா? அதுவும் தெரியாதா?

இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் வலைப்பதிவு எழுதி மக்கள் படித்து... என்ன கருமம் அய்யா இது?

தலித்துகளின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது யார்? நான்கு வர்ணத்தை கண்டு பிடித்தது யார்? ப்ரம்மாவின் மும், தோள், தொடை, காலில் இருந்து பிறந்ததாக மக்களை வகைப்படுத்தியது யார்? குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்? பாதிரியார் கொலைக்கு யார் காரணம்?

பதிவுகளை தமிழ்மணம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள். இல்லை என்றால் தாராளமாக விலகி விடுங்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் நிலைமைக்கு எங்களை தயவுசெய்து ஆளாக்க வேண்டாம்.

தாங்கள் என்னை ஆபாசமாக பேசியதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் தாங்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்தும் முற்றாக நீக்கப்படுவீர்கள்.

இது முதல் எச்சரிக்கைக் கடிதம்.

அன்புடன்,
தங்கமணி.


தங்கமணி அவர்களின் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் இது அவருடைய எழுத்துகள் இல்லை என்று. இந்த விடயங்கள் தெரிந்தும் அந்த பின்னூட்டங்களை ஜடாயு அனுமதித்தாரா அல்லது தமிழ்மண நிர்வாகிகள் பாசிசத் தன்மையோடு நடக்கிறார்கள் என்பது போன்ற தோற்ற மயக்கத்தை தர பயன்படுத்திக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. போலிகளுக்குத் துணை போகின்றவர்கள் யார் என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.

இந்த போலிப்பின்னுட்டமிட்டவருக்காக வருந்துகிறேன். நல்ல மனநல மருத்துவரை அணுகி சுகமடைய முயற்சி செய்யுங்கள்.

நன்றி தேசபக்தி சீமான்களே

பார்ப்பனிய முகமூடிகளை
சுட்டினாலே
இந்திய தேசிய எதிர்ப்பு

நன்றி தேசபக்தி சீமான்களே
உங்கள்
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு

ஐந்தில் அடங்குமா :-)

மனித வாழ்வு என்பதே உறவுகளாலும் உணர்வுகளாலும் முன்னும் பின்னும் பிணைக்கப்பட்ட
ஒரு சங்கிலித் தொடர்பயணம்தான். எனவேதான் இந்த வடிவில் வரும் எந்த நிகழ்வும் இயல்பாக நம்மை கவர்ந்துவிடுகிறது.இணையத்திலும் நான்கு, ஆறு , சுடர், Tag என மீண்டும் மீண்டும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் இவைகள் உறவுச் சங்கிலியாக பரிணமித்துவிடுகின்றன. இன்று என்னையும் இந்த விளையாட்டில் தன்னடக்க செம்மல் தம்பியும்,
கிரிக்கெட் தேழர் பாஸ்ட்பவுலரும்,

இணைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. வித்தியாசமான அல்லது கிறுக்குத்தனமான எண்ணங்களை பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு கிறுக்கனாகவும் வெளிப்பார்வைக்கு வித்தியாசமானவனாகவும் காட்சி தருகிறான். என்னைப் பற்றி நான் வித்தியாசமாக உணர்வதை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நிழல்கள்-நிஜங்கள்:
சிறுவயதிலிருந்தே நான் உணரும் ஒரு பழக்கம் இது. நிழலான வடிவங்கள் மீதான ஈர்ப்பு. எந்த ஒரு பொருளையும், இடத்தையும், மனிதனையும் கற்பனையாக நான் விரும்பிய வண்ணம் உருவாக்கிக் கொள்வது. பார்க்காத ஒரு மனிதரைப் பற்றி பேசும் போது அவரைப் பற்றி பேசப்படும் செய்திகளை வைத்து அவரது தோற்றம் இப்படி இருக்கும், குரல் இப்படி இருக்கும், குணம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பது. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் இப்படி கற்பித்து கொள்வது எனக்குள் பெரும் மகிழ்ச்சியை தரும். இதே போலத்தான் இடங்களைப் பற்றியான கற்பனை. குறிப்பாக வீடுகளைப் பற்றியான கற்பனை. பலமுறை வீடு பார்த்துவிட்டு அப்பா சொல்லும் குறிப்புகளைக் கொண்டு ஒரு வீட்டை என் விருப்பப்படி வடித்துக் கொள்வேன். அநேகமாக எல்லா தருணங்களிலும் என் கற்பனைக்கு பொருந்தாமலே இருந்திருக்கிறது. எப்போதுமே நிஜமான நிழலை நான் உள்வாங்கவில்லை.

மறதி:
இன்னைக்கு வரைக்கும் இந்த குணம் என்னை விட்டுப் போகவில்லை. எங்க வீட்ல சொல்லுவாங்க உனக்கு கை மறதிடானு. எந்த பொருளானாலும் கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்படியே எங்காவது மறந்துவிடுவேன். அதிகம் நான் மறப்பது சாவிகளே. பள்ளி கூட தருணத்தில் சைக்கிள் சாவியை தொலைத்துவிடுவேன். சைக்கிள் சாவியை சமயலறை, கழிவறை, பீரோ என இடம் பொருள் ஏவல் இல்லாமல் தேடுவேன். எனக்கு தட்டுப்படவே செய்யாது. அம்மா வந்துதான் எடுத்து கொடுப்பார்கள் ஒவ்வொரு முறையும். சில நேரங்களில் கண் எதிரே இருக்கும். அந்த ஒரு இடத்தைவிட்டு மத்த எல்லா இடங்களிலும் தேடும் பார்வை திறன் என்னுடையது. காலம் மாறி இருந்தாலும் பழக்கம் அப்படியே இருக்கிறது. சைக்கிள் சாவிக்கு பதில் சமயங்களில் அறைச்சாவி. கைபேசி, பர்ஸ் என தொடர்கிறது. என்ன ஒரு வசதி கைபேசியை மறந்துவிட்டால் எளிதாக கண்டுபிடித்துவிட முடிகிறது. இன்னொரு கைபேசியிலிருந்து அழைப்பு அனுப்பி:-). அதே போல பர்ஸ்க்கு ஏதேனும் வழி இருந்தால் கண்டறிய வேண்டும்.

புத்தகங்கள்(வாசிப்பு):
புத்தகங்கள் மீது எப்போதும் எனக்கு மிகுந்த பிரியம். எந்த நேரமானாலும் ஏதாவது ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பேன். ஆனந்தவிகடன், குமுதம் பொன்றவை எல்லாம் அரைமணி நேரம்தான். விறுவிறுவென வாசித்துமுடித்துவிடுவேன். அடுத்தவர் கையில் இருக்கும் புத்தகத்தை வாசிக்க ரெம்பபிடிக்கும். அவர்கள் இரண்டு பத்தி முடிப்பதற்குள் இரண்டு பக்கங்களை வாசித்திவிட்டு காத்துகிடப்பேன் எப்போ அடுத்த பக்கம் திருப்புவார்கள் என்று. வீட்டில் சாப்பிடும் போது கையில் ஏதேனும் ஒன்று வாசிக்க இருக்க வேண்டும். கதைபுத்தகங்கள் எதுவும் இல்லையென்றால் அப்பாவின் சேமிப்பில் இருக்கும் கம்யூனிச புத்தகங்களை வாசிப்பேன். சில நேரம் அப்பாவின் சங்க சம்பந்தமான துண்டறிக்கைகளை வாசித்து கொண்டிருப்பேன். அது பத்துவருட பழையதாக இருந்தாலும். சப்பாட்டு நேரத்தில் புத்தகத்தை பார்த்துகொண்டு தரையில் சோறு உண்ண முயற்சித்த தருணங்களும் உண்டு. என் தலைமாட்டில் புத்தகங்கள் வைத்துக் கொண்டு உறங்குவது மிகப் பிடித்தமான செயல். ஆனாலும் ஒரு சில புத்தகங்கள் தண்ணி காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. முன்பு பாட புத்தகங்கள். இப்போது கவிதை புத்தகங்கள்.

காதல்:
அது என்னவோ தெரியாது எனக்கு காதலர்கள் என்றால் என் நெருங்கிய உறவைப் போல நினைத்துக்கொள்வேன். காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களோடு எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று துடிப்பேன். கல்லூரிக்காலத்தில் இந்த கிறுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் இதனாலேயே அற்புதமான நண்பர்களும் எனக்கு கிடைத்தார்கள். காதலிப்பவர்களிடம் அவர்களின் கதை கேட்பது பிடித்தமான ஒன்று. தாந்தோன்றித்தனமாக சிலநேரம் அறிவுரை சொல்வதும், நான் சொல்வது போலவே நடப்பதும் பின்பு சொன்னவனுடன் இன்னும் நட்பு இறூகுவதும். கல்லூரிகால நினைவுகளை இப்போது நினைக்கும் போது எந்த அழுத்தத்தையும் போக்கும் புன்முறுவல் கிடைப்பது ஒரு சுகம்.

மரணத்திற்கு பின்:
என் மரணத்திற்கு பின் என்ன ஆவேன் என்பதை அறிய மிகுந்த ஆவலுண்டு.பலமுறை கனவாகவும் வரும். நான் இறந்து நாற்காலியில் கிடத்தி வைக்கப்பட்டீருப்பேன். உறவினர்கள் எல்லாம் அழுவார்கள். ஏன் இவர்கள் அழுகிறார்கள் என புரியாது. இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன்.அதே சமயம் அப்படி இறந்தால் அதன் பின்பு எங்கு இருப்பேன். இந்த உடம்பு எங்க போகும். பிரபஞ்ச வெளியில் மிதப்பேனே? என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். உடனே எப்படியாவது தூங்க வேண்டும் என துடிப்பேன். மிகப்பிரியமானவரை நினைத்துக் கொண்டு அவர் பெயரை தொடர்ச்சியாக உச்சரித்து தூங்கிவிடுவேன்.

அப்பாடா!! எப்படியோ நானும் எழுதிவிட்டேன். சங்கிலித் தொடர் அறுபடாது இருக்க நானும் ஒரு ஐந்து பேரை கோர்த்துவிடுகிறேன்.
சிவபாலன்
குழலி
பாலபாரதி
லக்கிலுக்
பொன்ஸ்

அன்புடன்
முத்துகுமரன்

சமஸ்கிருத அறிஞர்கள் உதவுக...

இந்து மதத்தினையும், வேதங்களை குறித்தும் ஒருவர் மாற்றுக் கருத்துகளையோ, விமர்சனங்களையோ செய்யும் போது சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை மொழி. பரந்து விரிந்த இந்துமதத்தின் வேதங்களும்,நீதிகளும் சமஸ்கிருதத்தில் இருந்துவிட கடைக்கோடி மனிதனுக்கு சிரமம்தான். ஓராண்டிற்கு முன் இங்கே ஒரு மந்திரத்தை முன் வைத்து நான் போட்ட பதிவின் போதே நான் தவறான மொழிபெயர்ப்பை வாசித்ததாக கடிந்து கொண்டார்கள். ஆகவே மீண்டுமொருமுறை அந்த தவறைச் செய்யமால், நான் வாசித்த சில சமஸ்கிருதச் சுலோகங்களுக்கு அல்லது மந்திரங்களுக்கான உண்மையான அர்த்தம் என்னவென்பதினை நண்பர்களிடம் விளக்கம் கேட்டு விடலாம் என்பதற்காகவே இந்தப் பதிவை இடுகிறேன். சரியான மொழிபெயர்ப்பு கிடைத்த பின்பே அவை தொடர்பான எனது கருத்துகளை சொல்வதையோ சந்தேகங்களை கேட்பதோ முறையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவைகளுக்குத்தான் எனக்கு சரியான மொழிபெயர்ப்பு வேண்டும்.

''வேதம்:ஸ்மிருதி:சதாச்சார்: ஸ்வஸ்ளச ப்ரிய மாத்மன:!''

''யோவமன்யேத் தே மூலே ஹேதுசாஸ்த்ராஅயத் த்விஜ:!
ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநிந்தக்:!!

''ஸ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாப்தத்ர தர்மாவுபெள ஸ்ம்ருதெள!''

''யா வேதபாஹ்யா: ஸ்ம்ருத்யோ யாஸ்ச காஸ்ச குத்ருஷ்:!
ஸர்வாஸ்தா நிஷ் வலா: ப்ரேத்ய தமோநிஸ்டா ஹித்: ஸ்ம்ருதா:!!''

''வேதாயத்வோபநிபந்திருதத் ப்ரமாண்ய ஹி மனோ: ஸ்ம்ருத்
மன்வர்த்தவிபரீதா து யா ஸ்மிருதி ஸா ந சஸ்யதே!!''

''புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத ஸ்சித்ஸித்!
ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி!!''


சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற, சமஸ்கிருதத்தை நன்கறிந்த இனிய வலை நண்பர்கள் இதற்கான சரியான காழ்ப்புணர்வற்ற தமிழ் மொழிபெயர்ப்பினைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி






நேற்று மதி அவர்களின் பதிவில் நண்பர் சாகரன் மரணம் என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டோம். திரும்ப திரும்ப இந்த செய்தி தவறானதாக இருந்துவிடக்கூடாத என்ற பதைபதைப்புடன் வாசித்தாலும் இழப்பை உனர்ந்தோம். மிகவும் அதிர்ச்சியானதாகவும், நம்ப இயலாததாகவும் இருக்கிறது.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக புதிதாக இணையதளம் தொடங்க எண்ணியபோது மனதில் தோன்றியவர் நண்பர் சாகரன். ஏற்கனவே தமிழ்மன்றம், முத்தமிழ் மன்றம் போன்ற களங்களில் ஏற்பட்ட பரிச்சயமும் நட்பும் அவரை தொடர்பு கொள்ள வைத்தது. நாங்கள் துவக்கு மாதிரி இதழ்கள் வெளியிட்டபோது வாழ்த்துகளையும், கருத்துகளையும் சொல்லி மிகுந்த உற்சாகத்துடன் எங்களின் முயற்ச்சிக்கு ஆதரவு கொடுத்ததுடன் எங்களுக்கான இணையதளத்தையும் உடனடியாக ஏற்படுத்தி தந்தார். தமிழின் மீதும் தமிழ் ஆர்வலர்களின் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும், நட்பும், அன்பும் மிகச்சிறப்பானது. தேன்கூடு என்ற வலைதிரட்டியின் மூலம் இணயத்தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தகுந்தது. ஆனால் நொடிப்பொழுதில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதை தாங்க இயலாததாக இருக்கிறது.

அவரின் மரணச்செய்தி எங்கள் இதயத்தை அறுக்கிறது. இந்த பெருந்துயரில் துவக்கு இலக்கிய அமைப்பு தங்களையும் இணைத்துக் கொள்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய எங்களது பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக

இசாக், நண்பன், கவிமதி, முத்துகுமரன். ஆசிப் மீரான், சே.ரா. பட்டணம் மணி.


** நண்பர்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

திரு சாகரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவர்தம் குடும்பத்தினர் இந்த பெருந்துயரிலிருந்து மீண்டு வருவதற்கான மனவலிமையை பெற்றிடவும் நம் இணைய நண்பர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்யலாம். எண்ணற்ற இதயங்களின் ஆதரவு அவர்தம் குடும்பத்திற்கு மனவலிமையை தந்திடும். நேரம் பற்றி நண்பர்கள் சொல்லுங்கள்

காவிரியும் தமிழக விவசாயமும்

காவேரியும் தமிழக விவசாயமும் - அர. செந்தில்குமரன்


காவிரி நடுவர் மன்றத்தை மாறியமைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையின் விளைவாக, காவிரி பிரச்சனை மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நடுவர்மன்ற தீர்ப்பு இன்னும் இரண்டொரு மாதங்களில் வருகிற நிலையில் கர்நாடக அரசியல் கட்சிகளின் இந்த கோரிக்கை தமிழக விவசாயிகளையும், கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.காவிரி பிரச்சனை இன்றுநேற்றல்ல... பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனை...

அதற்கு முன்பு காவிரி பற்றியும் அதை சுற்றி நடந்த நிகழ்வுகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது. அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி 1956ல் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மலைகளும், காடுகளும் நிறைந்தது இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது.


மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி சமவெளி மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெறும் பழமை வாய்ந்த விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம் காவிரி சமவெளியில் இருக்கின்றது. கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால் பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழலில் காவிரியில் உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முதன்முதலாக கி.பி. 2ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் காவிரி மீது கட்டப்பட்ட முதல் அணை கல்லணையாகும். உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக இது கருதப்படுவது சிறப்பாகும். காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல... அன்றைய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. ஆம் கி.பி. 11ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் மைசூர் அரசு காவிரியை தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த முனைந்தது. அப்போதெல்லாம் முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்ததும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டில் −ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.தமிழக, கர்நாடக நீர்வளம்தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சராசரி 1300 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது. கர்நாடகா முழுவதும் 3300 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் இரண்டரை மடங்கு அதிகமாக தண்ணீர் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில் காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734 டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும் நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும் 2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல் நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது. இந்த அளவு நீரைதான் தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி பரம்பரையாகவே காலங்காலமாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரிச்சிக்கல்1924ல் உருவான ஒப்பந்தம் 1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடாகா.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.இதன் பொருட்டு தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அப்போதைய பிரதமரின் தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர் மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர் மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970 முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள், முதல்வர்கள் போன்றோர் 21 முறை இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர் மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ் பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய முன்னணியின் முயற்சியால் தமிழக கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாகும்.நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும் என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்) கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது. இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன் விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும் பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிருக்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இது மட்டுமல்லாது கர்நாடகா அணைகளுக்கு கீழே உள்ள கர்நாடக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை ஆழப்படுத்தி அணைகளில் நிரம்பி வழியும் நீரையும் அதில் தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு நீர் கிடைக்காமல் செய்ய முயல்கிறது. தமிழகத்தின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை இன்று அரசியல் ஆக்கப்பட்டதுதான் வேதனை தரும் விஷயம். இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் இப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சமுறும் வகையில் நிகழ்வுகள் அங்கு அரங்கேறுகின்றன. காவிரி: தமிழகத்திற்கு நேரிட்ட அரசியல் சிக்கல்கள்நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்புவரை, அதுகாலம்வரை மத்தியில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் அரசு 'நடுவர்மன்றம்' என்பதையே அமைக்கவே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல் அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் - டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின் காவலன் என்கிறவகையான அறிக்கை போர்களில்தான் அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள உரிமையை மறைமுகமாக நீர்த்து போகச்செய்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கட்சியாக விளங்குவதால் அவை கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட தயங்குகிறது. தேசியக்கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களது தமிழ்நாடு பிரிவு தண்ணீர் கேட்டும், கர்நாடக பிரிவு தண்ணீர் தரக்கூடாது என்று கூறியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது கூட காவிரி நடுவர் மன்றத்தையே மாற்ற வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.காவிரி நீரை மறுப்பதில் கன்னடர்களுக்கு உள்ள ஒற்றுமை அதை பெறுவதில் தமிழர்களுக்கும், தமிழக ஆட்சியளார்கள், அரசியல்யர்களுக்கு இல்லை. அதனாலேயே மத்திய அரசு இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பாலைவனமாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இதை உணர்ந்து தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைப்பாகி காவிரியை மீட்க முயல்வதோடு தென்னக நதிநீர் இணைப்பை நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். இந்த நெருக்கடியானது மத்தியரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துமேயானால் காவிரி தீர்விற்கு அதுவே அச்சாரமாக அமையும்.

நன்றி: ஆறாம்திணை.காம்

போலி - டோண்டு

இரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.

தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள்? நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே என உங்க
அரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.

அம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.

ஈரத்துணி போட்டு கழுத்தறூக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.

**

போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்.

பொறியாளர் கணேசன் மீட்பு

விருதுநகர்: அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக பொறியாளர் கணேசனை, ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். பொறியாளரான இவர் அஸ்ஸாமில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த டிசம்பர் 22ம் தேதி கணேசன், பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். கணேசனை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 3 கோடி பணம் கொடுக்க வேண்டும் என கணேசனின் வீட்டுக்குப் போன் செய்து தீவிரவாதிகள் மிரட்டினர்.

கணேசனை மீட்கும் பணியில் முதலில் அலட்சியம் காட்டப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ரதிதேவி தனது குடும்பத்தாருடன் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை பார்த்து கண்ணீர் மல்க மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு முதல்வர் கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உதவியினால் ரதிதேவி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ராணுவ உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ராணுவத்தின் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. கணேசனை தீவிரவாதிகள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்த ராணுவம் சில நாட்களுக்கு முன்பு பூடான் எல்லை அருகே கணேசன் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்தது.
அங்கு கணேசன் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், ராணுவம் அப்பகுதியை முற்றுகையிட்டது. உள்ளூர் போலீஸாரும் உடன் வந்தனர். தாங்கள் முற்றுகையிடப்பட்டதை அறிந்த தீவிரவாதிகள் கணேசனை விட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.இதையடுத்து கணேசன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. பின்னர் பூடானில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்திற்கு கணேசன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கணேசன் பத்திரமாக மீட்கப்பட்ட விவரத்தை ராணுவ அதிகாரிகள் ரதிதேவிக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.கணேசனும், ரதிதேவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினருடன் பேசினார். இதனால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். விஜய கரிசல்குளம் கிராமமும் மகிழ்ச்சி அடைந்தது. அலுவல் ரீதியான விசாரணைகள் முடிந்த பின்னர் இன்னும் ஒரு வாரத்தில் ஊர் திரும்பவுள்ளதாக கணேசன் தெரிவித்துள்ளார் என ரதிதேவி தெரிவித்தார்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
**
சிறப்பாக செயல்பட்டு பொறியளர் கணேசனை மீட்ட ராணுவத்திற்கு பாராட்டுகள்

''புஷ்''ஷாவதரம்


போட்டுத்தாக்கு

//நூறாண்டுகளுக்கு முன் அன்பற்ற அன்னியர் / படையெடுப்பாளர்கள் தந்த பாலியல் கொடூரங்களால் இந்துமத வாழ்வியல் வாழ்க்கையில் அங்கமாக திணிக்கப்பட்டு இருந்த உடன்கட்டை ஏறுதல் என்பது இன்று முற்றிலும் காணாமல் போகவில்லையா?//

வாழ்த்துகள் ஹரிஹரன்!!!
Related Posts with Thumbnails