அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

வாழ்த்துகள் கலைஞர்....

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தமைக்காக நன்றிகளும் வாழ்த்துகளும்....

57 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

//அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தமைக்காக //
வழக்கமாக பலர் பூ எடுத்துவருவார்கள், சிலர் அதற்காகவே காத்திருப்பதால் அவர்களின் 'அர்சனையை' ஆரம்பிப்பார்கள்.

Pot"tea" kadai said...

ம்..ம்...

எங்கேயோ தீய்கின்ற வாசம் எழுகின்றதே...

பிரதீப் said...

இந்த ஆணை எப்பய்யா வந்துச்சு?
வாழ்த்துகள் கலைஞருக்கு மட்டுமில்லை, தமிழர்களுக்கும்தான்.

Radha N said...

தன்னைத்தவிர மற்றவர்களும் முதலமைச்சர் ஆகலாம் என்று அறிவிப்பாரா?

பரஞ்சோதி said...

வாழ்த்துகள். நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க.

இப்போதைக்கு அர்ச்சகர் ஆவதற்கு பதில் வேறு வேலைக்கு போய் நல்லாவே சம்பாதிக்கலாம்வே.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

The credit should go to Supreme Court for its verdict in 2002.In fact this can be implemented without any order.So MK has not done anything great.Neither DMK nor DK was a party to the case.
In fact the Sangh Parivar welcomed that verdict.

ஜோ/Joe said...

பொறுங்கள் ஐயா! இதனால் நாட்டுக்கு என்ன நன்மை?.இதனால் நாடு உருப்பட்டு விடுமா? இதில் நேரத்தை செலவழிப்பதை விடுத்து உருப்படியாக ஏதாவது திட்டம் கொண்டுவரலாமே? கருணாநிதிக்கு இது தான் முக்கியமாக தெரிகிறதா? --என்றெல்லாம் அறிவு ஜீவிகள் இப்போது பொங்கி வரத்தான் போகிறார்கள்.

முத்துகுமரன் said...

//கருணாநிதிக்கு இது தான் முக்கியமாக தெரிகிறதா? --என்றெல்லாம் அறிவு ஜீவிகள் இப்போது பொங்கி வரத்தான் போகிறார்கள். //

பொங்கி வந்தா பொங்கல் வச்சு ஆத்தாவுக்கு படைச்சிடுவோம்.....

முத்துகுமரன் said...

//The credit should go to Supreme Court for its verdict in 2002.In fact this can be implemented without any order.So MK has not done anything great.Neither DMK nor DK was a party to the case.
In fact the Sangh Parivar welcomed that verdict. //

ரவி,
உங்கள் விருப்பப்படியே இந்த வாழ்த்திற்கு உரிமையற்ற கருணாநிதிக்கு தெரிவித்த என் வாழ்த்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். சிறப்புமிக்க தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி... வாழ்த்து தெரிவித்த சங் பரிவாரங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....

எந்த சட்டியா இருந்தா என்ன? சோறு வெந்தா சரித்தான்:-)

முத்துகுமரன் said...

//'அர்சனையை' ஆரம்பிப்பார்கள். //
அதைத் தமிழில் செய்தால் அடியேனுக்கு மகிழ்ச்சியே :-)

முத்துகுமரன் said...

//தன்னைத்தவிர மற்றவர்களும் முதலமைச்சர் ஆகலாம் என்று அறிவிப்பாரா?//

அவர் என்ன மாட்டேனா சொல்றாரு. இன்னொருத்தரை அறிவிக்க நினைச்சு தொண்டைக்குழிக்குள்ளயே வச்சிருக்காரு.. சொன்னா கேட்டுக்கிற பெருந்தன்மைதான் நம்மகிட்ட இல்லை:-)

G.Ragavan said...

மிகவும் நல்ல அறிவிப்பு. இது தொழில்துறை வளர்ச்சிக்கு உதவாமல் இருக்கலாம். ஆனால் சமூக நீதி என்று கொள்ள வேண்டும். தொழிலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. இந்தப் பக்கமும் பார்க்க வேண்டும்.

இந்தத் திட்டம் முழுமையாக ஆதரிக்கப்பட்டு, விரும்புகிறவர் யாராக இருந்தாலும் அவருக்கு தகுதி வளர்ப்பும் பொறுப்பும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மு. சுந்தரமூர்த்தி said...

இட்லி வடை பதிவில் எழுதிய பின்னூட்டம். இங்கும் பொருத்தமாக இருப்பதால் இன்னொரு முறை.

----
Ravi Srinivas says:
//DMK cannot take any credit for this.//

and goes further:

//He could have passed this order in the previous term (1996-2001).Why he did not pass it then.Why only now.The reason is obvious, the verdict came in 2002.The
Kerala highcourt gave a similar verdict in 2000 itself.Based on that he could have done so.He did not want to take any risk then.But now he acts as the verdict of SC is
clear.This is like beating a dead snake to death.//

For everyone's information,
Mu.Ka. is getting old and can beat only a dead snake now. But, way back in 1972, when he was young and brave, he held that live snake by hand. He amended Hindu Religious and Charitable
Endowments Act during his second term in office so that any qualified person irrespective of the caste could become a priest in the government managed temples.

The amendment was swiftly challenged by Brahmins in the Supreme court with a dozen petitions. The apex court ruled against the amendment. In this scenario Mu.Ka. would not have dared to try again in 89-90 or 96-2001. Now that the situation is favorable, he swiftly acted to fulfill yet another poll promise.

We got to wait for few days and see if this is going to be challenged again, and then decide whether the snake is dead is alive.

The 1972 Supreme court case against Mu.Ka.'s action was argued by none other than "eminent jurist" Nani Palkiwala, who not surprisingly also was against the implementation of Mandal report in 90s.

It doesn't matter how many times Ravi tells this, but the fact remains that Mu.Ka. was the first to beat the snake before Keralites or anyone else. THE CREDIT SHOULD GO TO KALAIGNAR.

மு. சுந்தரமூர்த்தி said...

இட்லி வடை பதிவில் இட்ட பின்னூட்டம். இங்கும் பொருத்தமாக இருப்பதால் இன்னொரு முறை.

----
Ravi Srinivas says:
//DMK cannot take any credit for this.//

and goes further:

//He could have passed this order in the previous term (1996-2001).Why he did not pass it then.Why only now.The reason is obvious, the verdict came in 2002.The
Kerala highcourt gave a similar verdict in 2000 itself.Based on that he could have done so.He did not want to take any risk then.But now he acts as the verdict of SC is
clear.This is like beating a dead snake to death.//

For everyone's information,
Mu.Ka. is getting old and can beat only a dead snake now. But, way back in 1972, when he was young and brave, he held that live snake by hand. He amended Hindu Religious and Charitable
Endowments Act during his second term in office so that any qualified person irrespective of the caste could become a priest in the government managed temples.

The amendment was swiftly challenged by Brahmins in the Supreme court with a dozen petitions. The apex court ruled against the amendment. In this scenario Mu.Ka. would not have dared to try again in 89-90 or 96-2001. Now that the situation is favorable, he swiftly acted to fulfill yet another poll promise.

We got to wait for few days and see if this is going to be challenged again, and then decide whether the snake is dead is alive.

The 1972 Supreme court case against Mu.Ka.'s action was argued by none other than "eminent jurist" Nani Palkiwala, who not surprisingly also was against the implementation of Mandal report in 90s.

It doesn't matter how many times Ravi tells this, but the fact remains that Mu.Ka. was the first to beat the snake before Keralites or anyone else. THE CREDIT SHOULD GO TO KALAIGNAR.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

see my posts in idlyvadai's blog.

G.Ragavan said...

கிரெடிட்ட யார் கிட்ட வேணும்னாலும் குடுத்துக்கோங்க. திட்டம் நல்ல திட்டம் அவ்வளவுதான். இத ஏற்கனவே கருணாநிதி முயற்சி செஞ்சி கோர்ட்டு தீர்ப்பு வேற மாதிரி ஆயிருச்சி. அடுத்தடுத்து அவரு நடவடிக்கை எடுக்கலைன்னாலும், இப்ப தீர்ப்பு வந்தப்புறம் கொண்டு வந்தாரே. அதுக்குப் பாராட்டனும்.

aathirai said...

ஆணை எல்லாம் இருக்கட்டும். எப்போ அர்ச்சகரை
அப்பாயி ன் ட் பண்ணுகிறார்கள்?

VSK said...

இதன் மூலம் ஒரு சமூக நீதி கிடைத்து, அதன் வாயிலாக பெரும்பாலான தமிழர்களுக்கு ஒரு தனி மரியாதை கிடைத்தால், அல்லது கிடைப்பதால் எனக்கும் இதில் உடன்பாடே!

ஆனால், இதற்கு முன்னரும் "பல" கோயில்களில் எல்லாரும் அர்ச்சகராக இருப்பதாகத்தான் நினைவு!

ஒருவேளை, இது ஒரு குறிப்பிட்ட சாராரை நோக்கி எய்யப்பட்ட அம்பெனில்,
அதுவும் சரியே!
......அவரவர் பார்வையில்!

புளியமரத்துக்குப் பயந்தால் நடக்குமா!

முத்துகுமரன் said...

டீ கடை தீஞ்ச வாடை வராட்டித்தானே தப்பு.... வந்த வரைக்கும் சந்தோசம்தான்:-)

வாழ்த்துகளுக்கு நன்றி பிரதீப். இன்றூ காலை கூடிய அமைச்சரவை முதல்கூட்டத்தில் இந்த ஆணை போடப்பட்டிருக்கிறது. மேலதிக விபரங்கள் ரவிஸ்ரீனிவாசின் பின்னூட்டத்தில் இருக்கிறது.

முத்துகுமரன் said...

சபாஷ் சரியான கேள்வி !!

இந்த கேள்விகள் பதில் சொல்வதற்கு முன் நாங்கள் தற்சமயம் இந்த பிரச்சனைக்கு புதியவர்கள் என்பதையும், முன்பிருந்து இழந்த உரிமைகளில் இதுவும் ஒன்று என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்

முத்துகுமரன் said...

//மிகவும் நல்ல அறிவிப்பு. இது தொழில்துறை வளர்ச்சிக்கு உதவாமல் இருக்கலாம். ஆனால் சமூக நீதி என்று கொள்ள வேண்டும். தொழிலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. இந்தப் பக்கமும் பார்க்க வேண்டும்.//

சரியா சொன்னீங்க ராகவன்

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யோகன்

முத்துகுமரன் said...

மு.சுந்தரமூர்த்தி..

கலைஞரின் பங்கு குறித்தான தகவல்களுக்கு நன்றி. ஆனா கலைஞருக்கு இந்த சாதனை சொந்தமில்லைனு சொல்லி மனசாந்தி அடைபவர்களை நாம் ஏன் தடுக்க வேண்டும்.

வரவேற்பது போல பேசினாலும் தெளிவா ''ஆகம'' விதிப்படி வழிபாடுகள் நடக்கணும்னு சொல்றதை நாம் கவனிக்க வேண்டும்... தேவாரம் திருவாசகம் எல்லாம் பத்தாதாம். வேற ஒன்னும் வேணுமாம். அந்த ஆகம விதிகளை யார் தீர்மானிப்பார்களாம்??

அருண்மொழி said...

பொருத்திருந்து பாருங்கள். அவாள் டெல்லிக்கு கூடிய சீக்கிரம் காவடி எடுப்பர். முடிந்தால் அவாள்-கோர்டில் stay வாங்குவர்.

வரவனையான் said...

ஏன் முத்துகுமரன், இவா எல்லாம் கோச்சுக்கிறா! யாரோ ஒரு அம்பி சுப்ரீம் கோர்டுக்குத்தான் அந்த பெருமைன்னு வேற பூனூல்ல அழுக்கு படலன்னு சொல்றார்.1972 லேயே இந்த கருனாநிதி புன்னியவான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்னு ஒரு உத்திரவ போட்டு மொத மணியை இந்த அக்கிரகாரத்துபூனைகளுக்கு கட்டினார்.அதெல்லாம் அவா வசதியா மற்ந்துடுவா.

அந்த கருமத்த விடுங்க நம்ம பழனியில இவா புகுந்து பன்ற அழிச்சாட்டுயம் இருக்கே.அது ஒரு தனி கத. பைபிள் படிச்சவனெல்லாம் பாதிரியாகலாம், குரானை ஓத தெரிஞ்சா மௌலவி ஆகலாம்.ஆனா பாருங்க மந்திரம் சொல்லத்தெரிஞ்சாலும் இந்த சூத்திர பயலுவ உள்ளே நுழையக்கூடாதுன்னு ஆகமம்மாம்.தூத்தெறி.....
பழனி கோயில்ல வேலை பாக்குற எந்த பாப்பானா இருக்கட்டும்,இல்ல 12வயசுல பூனூல் கல்யானம் பன்னிண்ட அகில உலகமெங்கும் நிறைஞ்சிருக்குற அனைத்து பாப்பானா இருக்கட்டும் "முருகன்" அப்படின்னு பேரு வச்ச ஏதாவது ஒரு பாப்பான காட்ட சொல்லுங்க .என் தெய்வத்தின் பெயரைக்கூட ஏற்றுக்கொள்ளாத நீங்களா எங்களின், எங்கள் மக்களின் கடவுளுக்கான அர்ச்சகர்கள்.

கலைஞர் நீ வாழியம்மான்

கால்கரி சிவா said...

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம் தேவையில்லை மனம் தான் வேண்டும். மதுரையில் ராமகிருஷ்ண மடம் மற்றும் சில சமுதாய அமைப்புகள் அனைத்து வகுப்பினருக்கும் அர்ச்சகர் ஆக வகுப்பு எடுகின்றனர். அதில் சேர்ந்து தேறுவதற்க்குத் தான் ஆட்கள் இல்லை. இதை என்னுடைய பதிவில் சவால் விட்டிருந்த்த சுவாமி ரெட்புல் என்பவருக்கு பதில் சொல்லியிருந்தேன். இதைக் கேட்டதும் அவர் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட்டார்

முத்துகுமரன் said...

பின்னூட்டங்களை EDIT செய்யத் தெரியாததால் உங்கள் பின்னூட்டத்தை அப்படியே பிரசுரித்திருக்கிறேன்.

வரவனையான் உங்கள் நடையில் எனக்கு ஒப்புதல் இல்லை எனினும்
உங்களின் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன்.
//என் தெய்வத்தின் பெயரைக்கூட ஏற்றுக்கொள்ளாத நீங்களா எங்களின், எங்கள் மக்களின் கடவுளுக்கான அர்ச்சகர்கள்.//

முத்துகுமரன் said...

கால்கரி சிவா நிச்சயம் மனம்தான் வேண்டும். உங்கள் பார்வையோடு ஒத்து போகிறேன்.

//மதுரையில் ராமகிருஷ்ண மடம் மற்றும் சில சமுதாய அமைப்புகள் அனைத்து வகுப்பினருக்கும் அர்ச்சகர் ஆக வகுப்பு எடுகின்றனர்//
நல்ல செய்தி. இதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெருக வேண்டும்..

ஆனால் ஒரே ஒரு கேள்வி. இங்கு பயின்று வரும் மாணக்கர்கள் ஆகம விதிப்படி கோயில்களில் பணிபுரிய ஏற்றுக்கொள்ளப்படுவார்களா??

கால்கரி சிவா said...

பிராமணர் குலத்தை சாராத மதுரையில் உள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த பலர் பல நூற்றாண்டுகளாக அர்ச்சகர்களாகவும் புரோகிதர்களாகவும் உள்ளனர். அவர்களை பிராமணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உ.ம் : ஸ்ரீவெங்கட்ரமண பாகவதர், கர்நாடக இசைத் தந்தை தியாகராயரின் பிரதம சீடர்

தமிழ் திரைஇசையில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பிண்ணணி பாடிய திரு டி.எம். சௌந்தராஜன் அவர்கள். இவரின் குடும்பம் பல நூற்றாண்டுகளாக புரோகிதம் செய்து வருகிறார்கள்.

ஆகையால் திரு கருணாநிதி ஒன்றும் பெரிய சீர்திருத்தம் செய்யவில்லை. ஏற்கனவே வழக்கத்தில் உள்ளதை விளம்பரப் படுத்தி பகுத்தறிவு பகலவன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார்.

கால்கரி சிவா said...

முத்துக் குமரன், ஆம். நிச்சயமாக

Dr.Srishiv said...

வரவேற்கத்தக்க ஒன்று...qualified people should be appointed and heard that in chennai vedhagama college, non brahmins were also trained for this...they can be appointed based on the interview by the employment office, then atleast the employment offices will get some job to do ;)
srishiv.:)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

வரவேற்பது போல பேசினாலும் தெளிவா ''ஆகம'' விதிப்படி வழிபாடுகள் நடக்கணும்னு சொல்றதை நாம் கவனிக்க வேண்டும்... தேவாரம் திருவாசகம் எல்லாம் பத்தாதாம். வேற ஒன்னும் வேணுமாம். அந்த ஆகம விதிகளை யார் தீர்மானிப்பார்களாம்??

You better read the verdict of the
Supreme Court instead of blaming me.I have given lot of details in
my responses in idlyavadai's post.
The verdict does not give the liberty to change the exisiting
practices as per agamas but only
affirms that caste is not a bar
to become an archaka.Even the
order passed by DMK govt earlier
did not envisage replacing agamic
practices with other practices.
So dont talk nonsense without
understanding the issue.Dont confuse this worship in Tamil.
That is a different issue.I hope
atleast this will be understood.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பிராமணர் குலத்தை சாராத மதுரையில் உள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த பலர் பல நூற்றாண்டுகளாக அர்ச்சகர்களாகவும் புரோகிதர்களாகவும் உள்ளனர். அவர்களை பிராமணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உ.ம் : ஸ்ரீவெங்கட்ரமண பாகவதர், கர்நாடக இசைத் தந்தை தியாகராயரின் பிரதம சீடர்

தமிழ் திரைஇசையில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பிண்ணணி பாடிய திரு டி.எம். சௌந்தராஜன் அவர்கள். இவரின் குடும்பம் பல நூற்றாண்டுகளாக புரோகிதம் செய்து வருகிறார்கள்.

ஆகையால் திரு கருணாநிதி ஒன்றும் பெரிய சீர்திருத்தம் செய்யவில்லை. ஏற்கனவே வழக்கத்தில் உள்ளதை விளம்பரப் படுத்தி பகுத்தறிவு பகலவன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார்.


There are different types of temples.This order or the verdict
pertains to temples under govt control that is managed by HRCE
dept.In these temples also hereditary rights are there.
Private temples which are not
under govt. control have their own
arrangements in selecting or appointing archakas, and these are
often hereditary rights.

Of course it is common knowledge that in many temples archakas/poojaris are
not brahmins. And not all temples
follow rules of agama worship.
I have spoken too much on this,
i better stop :)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Among Sourashtras some call themselves as iyers and iyengars.
The expansion for TMS is Tiruparankundram Meenakshisundaram Sounddarajan (Iyengar).I have come across Sourashtras whose surname is
iyer/iyengar but often this
is not displayed in public
(eg TMS).Some put these surnames in marriage invitations but not in official names.

Pot"tea" kadai said...

நல்லா சூடா இருக்கு, கொஞ்சம் குளிர் காஞ்சுக்கறன்பா...எங்க ஊர்ல குளிர் தாங்கல...:-))

சத்திய நேசன் said...

//The credit should go to Supreme Court for its verdict in 2002.In fact this can be implemented without any order.So MK has not done anything great.Neither DMK nor DK was a party to the case.//


சன் டிவி செய்தியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி இந்த ஆணை பிறப்பிக்கப் படுவதாகத்தான் சொன்ன ஞாபகம். திரு. கருணாநிதி 'பகுத்தறிவு பகலவன்' பட்டத்திற்கு ஆசைப்பட்டு இதை செய்ததாக தெரியவில்லை.

2002-ல் வந்த தீர்ப்பை அப்போது முதல்வராக இருந்த ஜெ அமுல்படுத்தாத சூழ்நிலையில், தான் ஆட்சிக்கு வந்த உடன் முதல் வேலையாக செயல்படுத்திய திரு.கருணாநிதி நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்தான்.

முத்துகுமரன் said...

ரவி,

உங்கள் பதிலுக்கு நன்றி....
பிரச்சனைகளை புரியாமல் பேசவில்லை. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் இருந்து நிறைய செய்திகளை அறிந்துகொண்டேன். அதில் முக்கியமாக கருதுவது.

//The verdict does not give the liberty to change the exisiting
practices as per agamas but only
affirms that caste is not a bar
to become an archaka.Even the
order passed by DMK govt earlier
did not envisage replacing agamic
practices with other practices.
So dont talk nonsense without
understanding the issue.Dont confuse this worship in Tamil.//.

நந்தன் | Nandhan said...

Excuse my english.
I dont mind who takes the credit. This measure is a good one. Atlast we are coming out of 'reservations' ;)

thiru said...

முத்துகுமரன், 1972ல் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டுவந்ததை அறிஞர் ரவிஸ்ரீனிவாஸ் வசதியாக மறக்கலாம். ஆனால் அர்ச்சகர் வழக்கு நடந்து சட்டப்போரில் தோற்றாலும், காலம் விடாமல் துரத்திய போரில் வீழ்ந்த இந்த கனியின் பின்னால் திரு.மு.கருணாநிதி இருக்கிறார் என்பதை நீதிமன்றங்களின் குறிப்புகள் சொல்லும். ரவி உங்கள் கருத்துக்களுக்கு ஆதாரமாக எதை சொல்கிறீர்கள்? தெரிந்து கொள்ள ஆவலுடன்...

வரவனையான் said...

>>>"முருகன்" அப்படின்னு பேரு வச்ச ஏதாவது ஒரு பாப்பான காட்ட சொல்லுங்க <<<

பிரபல எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள் பிராமணர்தான்.



ஆக நம்பர் ஒன்னு கிடச்சாச்சு,ம்ம் அடுத்து அடுத்தாத்துல, பக்கத்துதாத்துலயும் கொஞ்சம் பாத்து சொன்னேள்னா கொஞ்சம் வசதியா இருக்கும்.ஆனா எனக்கு பத்து வரைகும் தான் என்னத்தெரியம்னு நினைக்காதிங்க.


தகவலுக்கு நன்றி திரு,ரா.சம்பத்

மு. சுந்தரமூர்த்தி said...

Nandhan says:
//I dont mind who takes the credit.//

It is not right. It matters who gets the credit. If it is something bad, would every one who attempts to divert and dilute this spare Mu.Ka. from blame?

The credit should be given where it is due. MuKa deserves that credit for: (1) setting the ball rolling 30 years back; (2) including it in the manifesto this time without giving it up and; (3) most importantly keeping that promise.

It is the polical leadership that brings changes (both good and bad) not courts and bueracracy as some may believe. Giving credit to supreme court is the biggest joke. The same supreme court--not the same judges--ruled against it in the past citing agama rules not by interpreting the constitution.

aathirai said...

//The verdict does not give the liberty
to change the exisiting
practices as per agamas but only
affirms that caste is not a bar
to become an archaka.//


இந்த கோயில்களெல்லாம் தமிழக மக்களின் உழைப்பைச் சுரண்டி
கட்டபட்ட கோயில்களாக இருப்பதால் இங்கு எப்படி 'பூ செய்ய'
வேண்டுமென்பதை சொல்ல வேண்டியது தமிழக மக்கள் மட்டுமே.

அதுனால நாட்டாம சட்டத்த மாத்தூ!!!!!

இதுவும் அரசாங்க வேலை ஆவதால் இதற்கும் மாநில அரசின்
இட ஒதுக்கீடு வழிமுறைகள் பொருந்தும் அல்லவா?

arulselvan said...

Ravi,

>>>The expansion for TMS is Tiruparankundram Meenakshisundaram Sounddarajan (Iyengar).

Finally some Iyengar with Vibhuthi . :-).

Jokes apart,
As this order pertains to temples with only agamic worship how about liberating many temples that have been taken over by Brahmins in the last couple of centuries and giving them back to the legitimate heirs of original worshipers? No, not the ownership of the temples but the adhikara to perform puja-s as they used to perform before. This is an issue and it concerns with worshiping in tamil.
Things are not so cut and dried.
arul

கால்கரி சிவா said...

Ravi Srinivas,

You are wrong. TMS = Thoguluva MeenkashiSundaram Soundarajan.

Thoguluva is family name

TMS's younger brother was chief prohith during my wedding

Sourashratras are not Bhramin by birth but they become Iyers and Iyengars by practising the "Agamams"

Prasanna said...

என்ன நடந்தாலும் சரிதான், இருவது வருஷத்துக்கு அப்புறம் எல்லா கோயில்லயும் மனுஷன் தான் அர்ச்சகரா இருப்பாங்க. பிராமணன் சூத்திரன் அப்படின்னு பாகுபாடு இருக்காது. அதுவரைக்கும் இந்த சட்டத்த வரவேற்கலாம்.
பிரசன்னா

வெற்றி said...

முத்துக்குமரன்,
நல்ல செய்தி ஒன்றை இங்கே தந்தமைக்கு நன்றிகள். யார் இச் சட்டத்தை கொண்டு வந்தார்கள் என்பது அல்ல முக்கியம். அச் சட்டம் தமிழ்ச் சமுகத்தில் புரையோடிக் கிடந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால் மதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் அவர்களை நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், சட்டத்தை வெறும் கடதாசியில் மட்டும் கொண்டு வந்தால் போதாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல், சட்டத்தை கடதாசியோடு மட்டும் நிறுத்தி விடாது, இச் சட்டத்தை கலைஞர் அவர்கள் முன்னின்று முறையாக நடைமுறைப் படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஊக்கம் அளித்து, அவர்களுக்கு உதவியும் வழங்க வேண்டும். செய்வாரா கலைஞர்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வெற்றி said...

முத்துக்குமரன்,
நான் எனது முன்னைய பின்னூட்டத்தில் ஒரு சங்கதியைச் சொல்ல வேண்டும் என நினைத்து பின்னர் மறந்து விட்டேன். நான் சொல்ல வந்த சங்கதி என்னவென்றால், ஈழத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள தொண்டைமானாறு எனும் ஊரில் உள்ள சந்நிதி முருகன் ஆலயத்தில் பிராமணர் சமூகத்தைச் சாராதவர்கள் தான் காலம் காலமாக பூசை செய்து வருகிறார்கள். அடுத்தது, நியூயோர்க் மாநிலத்தில் உள்ள Rush எனும் ஊரில் ஈழத் தமிழர் ஒருவர் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தைக் கட்டி நிர்வகித்து வருகிறார்கள். அவ் ஆலயத்தில் ஆலயத்திற்கு வரும் பத்தர்கள் அனைவரும் தாமாகவே பூசை செய்யலாம். உண்மையிலேயே சமத்துவம்/சமதர்மம் நிலவும் ஒரே ஒரு சைவக் கோயில் உலகத்திலேயே இக் கோவிலாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.(சரியாகத் தெரியாது)

Sivabalan said...

முழு மனதுடன் வரவேற்கிறேன்!!

Unknown said...

மேலே உள்ள கருத்தை சொன்ன செல்வன் நான் அல்ல.

கோவி.கண்ணன் said...

முத்துகுமரன் நீங்கள் எந்த கோவிலுக்கு அர்சகராகப் போகிறீர்கள் :). இந்த அறிக்கையை வெளியிட்டத்துக்கு கலைஞருக்கு கோவில் கட்டி கும்பிடலாம். :)

அருண்மொழி said...

Siva,

//ஆகையால் திரு கருணாநிதி ஒன்றும் பெரிய சீர்திருத்தம் செய்யவில்லை. ஏற்கனவே வழக்கத்தில் உள்ளதை விளம்பரப் படுத்தி பகுத்தறிவு பகலவன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார்.//

பகுத்தறிவு என்றால் உளறல் (அதுவும் முக்கியமாக தமிழ்நாட்டில்) என்று நினைக்கும் உங்களுக்கு யார் பகுத்தறிவு பகலவன் என்பது தெரியவில்லை.

எங்களை பொருத்தவரை பகுத்தறிவு பகலவன் என்றால் அது உங்களால் அன்போடு ராமசாமி நாயக்கர் என்று அழைக்கப்படும் பெரியாரே ஆகும்.

முத்துகுமரன் said...

selvan, தவறுக்கு வருந்துகிறேன். செல்வன் இது தான் எழுதிய பின்னூட்டம் இல்லை என்று சொல்லி இருந்தார். நான் உங்கள் வலைப்பூ இணைப்பை சொடுக்கிய போது அது திறக்கவில்லை. எனவே போலியாக இருக்குமோ என்ற சந்தேகத்தினாலே நீக்கி இருந்தேன். தற்போது இருவரும் வேறு வேறு என்பதை உறுதி செய்திருப்பதால் என் தவறுக்கு மறுபடியும் வருந்துகிறேன். யாருடைய கருத்தையும் தடை செய்ய வேண்டுமென்பது என் நோக்கமல்ல.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

முத்துகுமரன் said...

தவறுதலாக நீக்கப்பட்ட Selvan அவர்களின் பின்னூட்டம்
//This order looks like pouring oil on fire.This will create caste problem. There is no law that only particular caste person can perform this duty.Nobody can stop if somebody want to perform that duty. Only requirement is he/she should have personal interest to do.I did not expect this order from kalaignar since he believes that whoever believe god is fool.//

Muthu said...

முத்துகுமரன்,

இந்த ஆகம விதிகள் என்றால் என்ன என்றும் இதற்கு அத்தாரிட்டி யார் என்றும் யாராவது பதிவு எழுதலாமே?

அருண்மொழி said...

நண்பர்களே பொருத்திருங்கள். விரைவில் ஆகம கல்லூரி ஆரம்பிக்கப்படும். ஜெ ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பிறகு ஓரம் கட்டப்பட்டது. கலைஞர் இதை முழுமையாக செய்வார் என்று நம்புவோம்.

முத்துகுமரன் said...

ஹரி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் கொடுத்த சுட்டிகள் பயனுடையது...

ஜெயக்குமார் said...

இவையெல்லாம் சட்டரீதியாக உத்தரவு போற்று வருவது நல்லதல்ல, தானாக ஏற்படும்போது பிரச்சனை உருவாக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுவதே, சிறப்பாகும். அதுதான் பகைமை உணர்வைப்போக்கும். இது உணர்வுகள் சம்பத்தப்பட்ட விசயம். இருந்தாலும் இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.

Related Posts with Thumbnails